Author: Priya ram
•Thursday, January 27, 2011
"தாயே... காமாட்சி...
இதுவாவது
ஆண் குழந்தையா
இருக்கணும்..... "
- கும்பிட மட்டும்
பெண் தெய்வம் தேவை....
குழந்தையாய்
தேவை இல்லை ?


நான் கருவில் இருந்து
விடுதலையாக
எந்த முறையில்
போராடுவது ?
சொல்லுங்கள்
காந்தி மகாத்மாவே......


நெல் மணி
கள்ளிப் பால்
ஈரத் துணி
இவற்றை விடக்
கொடியது....
"சீ! பெண் குழந்தையா ?"
- என்கிற ஏளன விசாரிப்பு !


இந்த உலகம்
பெண்ணை பயமுறுத்தும்....
அல்லது
பெண்ணைப் பார்த்து
பயப்படும்...
இயல்பாய் எப்போது
இருக்கும்.... ?


பெண்கள்
புத்தகங்களைத்
திறந்தால்தான்
பெண் சிசுக் கொலையை
மூட முடியும்!

கன்னிகைகளாக
பெண்களை
தேடுகிறார்கள்.....
குழந்தைகளாக
அவர்களை
கொன்றுவிட்டு!

இவர்கள்
பெற்றெடுக்க
மாட்டார்கள்!
பெண்ணே.....
பிறந்திடு !

This entry was posted on Thursday, January 27, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...